Thursday, December 2, 2010

சில தனிப்பாடற் காட்சிகள் 12

பயனில்லாத ஏழு விஷயங்களை இங்கு பார்ப்போம்.


ஆபத்துக் குதவாப் பிள்ளை யரும்பசிக் குதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திர மறியாப் பெண்டிர்
கோபத்தை யடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தை தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழுந்தானே!


ஆபத்து சமயத்திற்கு உதவாத பிள்ளை,அருமையான பசி வேளையில் உதவாத சோறு(அன்னம்),தாகத்தை தீராத தண்ணீர்,குடும்பத்தின் தரித்திர நிலை தெரியாத குடும்பப் பெண்கள்(மனைவி,  மகள்,  அம்மா,  சகோதரி, அத்தை, அண்ணி, கொழுந்தியாள், நாத்தனார்), கோபத்தை அடக்க முடியாத மன்னன்( இக்காலத்தில் அமைச்சர்கள்),குருவான ஆசிரியரின் அறிவுரைகள், கருத்துக்கள், பாடங்களை கற்று வாழ்க்கையில் கடைப்பிடிக்க தெரியாத மாணவன், பாபம் செய்தவரை அப்பாபத்திலிருந்து விடுவிக்காத தீர்த்தம், இவை ஏழும் பயனில்லை என்று கூறுகிறது விவேக சிந்தாமணி.

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன் 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்