Monday, September 13, 2010

சில தனிப்பாடற் காட்சிகள் 2

முன்பொரு காலத்தில் இரட்டைப் புலவர்கள் இருந்தார்கள்.ஒருவர் கண்ணில்லாத குருடர்,மற்றவர் காலில்லாத முடவர்.முடவரை குருடர் தோளில் தூக்கிக் கொள்வார்.முடவர் வழி காட்ட குருடர் அவ்வழியே நடந்து செல்வார்.
ஒரு நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குளித்துவிட்டு துணிகளை அலசிக் கொண்டிருக்கும் போது குருடரின் துணி நழுவி பொற்றாமரைக் குளத்துக்குள் மூள்க ஆரம்பித்தது.அப்போது முடவர் குருடரைப் பார்த்து

அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாம் அதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ-
 குருடர் முடவர் தன்னைக் கேலி செய்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு அவர் முடவரைப் பார்த்து
இப்புவியில்
இக்கலிங்கம் போனால் என்? ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை
ஆடைகளை (அப்பிலே) தண்ணீரில் தோய்த்து அடுத்தடுத்து நாம் அதனைத் தப்பித் தப்பி அடித்துத் துவைத்தால் (அது துன்பப்பட்டு) நம்மை அந்தத் துணி நம்மைவிட்டு தப்பித்து ஓட முயற்சிக்காதா என்று முடவர் குருடரைப் பார்த்துக் கேட்க ,
அதற்கு குருடர் ஒப்பில்லாத இந்த்த் துணி(கலிங்கம்) போனால் என்ன மாமதுரையில் உள்ள சொக்கலிங்கமான இறைவன் உண்டே துணை என்று பதில் அழித்தார். இந்தப் வெண்பாப் பாடலில் முதலிரண்டு வரிகளை முடவர் பாடியது.பின்னிரண்டு வரிகளை குருடர் பாடியது.ஆனால் பொருள், சந்தம்,இசை இவற்றில் ஒத்திருக்கும் என்பதே இதன் அழகு.

முழுப்பாடல் இதோ
அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாம் அதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ-இப்புவியில்   
இக்கலிங்கம் போனால் என்? ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை.
 நன்றி
இப்படிக்கு
சாமீ அழகப்பன்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்