Tuesday, September 14, 2010

சில தனிப்பாடற் காட்சிகள் 4

சிலேடை என்பது மிகவும் சுவரசியமான ஒன்று.அதாவது இரு பொருள் படப் பாடுவது சிலேடை. ஒரு பாடலில் அப்படியே வைத்து இரு பொருள் படப் பாடுவது செம்மொழிச் சிலேடை. பிரித்துப் பொருள் கொள்வது பிரிமொழிச் சிலேடை.

கவி காள மேகப் புலவர் செம்மொழிச் சிலேடை,பிரிமொழிச் சிலேடை, இரண்டையும் பாடுவதில் வல்லவர்.

கவி காள மேகப் புலவர் ஒரு முறை யம கண்டம்( யம கண்டம் பற்றி வெறோர் வலைப் பூவில் பார்க்கலாம் ) பாடிய போது பின்னங்கள் (ஒன்றுக்கு கீழ் உள்ள அளவுகள்) அத்தனையும் ஒரே வெண்பாவில் வைத்துப் பாடச் சொல்லி எதிர் வழக்காடும் புலவர் கேட்க அதற்கு கவி காளமேகம் பாடிய பாடல்.

முக்காலுக் கேகா முன், முன் னரையில் வீழாமுன் 
அக்கா லரைக்கால்கண்டு அஞ்சாமுன் -விக்கி 
இருமாமுன் மாகாணிக் கேகா முன் கச்சி
ஒரு மாவின் கீழரையின் றோது.


முதலிற் ஒரு பொருள் கூறல்;-பின்னங்கள்(ஒன்றுக்கு கீழ் உள்ள அளவுகள் அத்தனையும் )
1)முக்கால் = 3/4
2)அரை = 1/2
3)கால் =1/4
4)அரைக்கால் =1/8
5)இருமா = 1/10
6)மாகாணி =1/16 அல்லது (வீசம்)
7)ஒரு மா = 1/20 
பிறகு வேறோர் பொருள் கூறல்;- (முக்காலுக்கேகாமுன்) கிழப் பருவம் எய்தி மூன்று கால்களில் (இரண்டு கால்கள்+கைத்தடி= மூன்று கால்கள்) நடப்பதற்கு முன்னால், முன்னால் நரை ஏற்பட்டு அதில் விழுவதற்கு முன்,அக்காலரைக்கால் கண்டு அஞ்சாமுன் ( அந்த எம தூதர்கள் இதோ வந்து விட்டார்கள்,அதோ வந்து விட்டார்கள், என்று சொல்லி அச்சப்படுவதற்கு முன்,ஒரு விக்கல் விக்கி இருமி உயிர் பிரிவதற்கு முன்(ஒரு விக்கல் விக்கி இருமியே உயிர் பிரியும்),மாகாணிக் கேகா முன்(மாகாணி என்பது (இ)சுடுகாடு
 .உலகத்தில் உள்ள உயிர்களை யெல்லாம் வாங்கிக் கொள்ளும் காணி மாகாணி. அந்த மாகாணிக்கு போவதற்கு முன்னம்,ஒரு மாவின் கீழரையின் றோது,(ஒரு மரா மரத்தின் கீழே இருக்கின்ற இறைவனை இன்றே ஓதி ,உணர்வீர் .
நன்றி
என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன், 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்