Monday, September 20, 2010

சில தனிப்பாடற் காட்சிகள் 6

இன்று ஒரு புதிய பாடல் அமைப்போடு உங்களைச் சந்திக்கிறேன்.
அது அந்தாதி.ஒரு பாடலின் அந்தம் (முடிவுச் சொல்), அடுத்த பாடலின் ஆதியாக(முதற்சொல்லாக) அமைத்துப் பாடுவது அந்தாதி.
இங்கு பாரதியாரின் கண்ணன் திருவந்தாதியை இங்கு தருகிறேன்.
உங்களுக்குப் புரிவதற்காக அந்தத்தையும், ஆதியையும் தனி நிறத்தில் காணத்தந்திருக்கிறேன்.
கண்ணன் திருவந்தாதி 

கண்ணன் திருவடி எண்ணுக மனமே
திண்ணம் அழியா வண்ணம் தருமே ...(1)

தருமே நிதியும் கருமா
மேனிப் பெருமான் இங்கே...(2)

இங்கே அமரர் சங்கந் தோன்றும்
மங்கும் தீமை பொங்கும் நலமே...(3)

நலமே நாடிற் புலவீர் பாடிர்
நிலமாமகளின் தலைவன் புகழே...(4)

புகழ்வீர் கண்ணன் தகைசேரமரர்
தொகையோடசுரப் பகை தீர்ப்பதையே...(5)

தீர்ப்பான் இருளை பேர்ப்பான் கலியை
ஆர்ப்பார் அமரர் பார்ப்பார் தவமே...(6) 



நன்றி 
இப்படிக்கு என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்   

No comments:

Post a Comment

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்